புதன், 17 அக்டோபர், 2012

சமுதாய சீர்கேட்டில் ஈடுபடும் துரோகிகளுக்கு எச்சரிக்கை

புலம் பெயர் தேசத்தில் வாழும் தமிழ் உறவுகளே கடந்த சில தினங்களுக்குமுன்னர் சுவிற்சர்லாந்தில் வாழும் ஒரு இளம் பெண்ணின் ஒளிபதிவு முகபுத்தகம் வாயிலாகவும் ப்ளாக் மூலமாகவும் தமிழ் மக்களிடையே பரவ விடப்பட்டது.
அந்த காணொளியானது மிகவும் கீழ்த்தரமான சிந்தனையுள்ள ஆணால் திட்டமிட்ட முறையில் காதல் வலை விரிக்கப்பட்டு பின்னர் அந்த பெண்ணை ஏமாற்றி சில அந்தரங்கமான விடயங்கள் படமாக்கப்பட்டதுடன்  அந்த வீடியோ ஒளிபதிவைக் கொண்டு பணம் பறிக்கும் நோக்குடனும், அந்த இளம் பெண்ணை மானபங்கபடுத்தும் நோக்குடனும் எடுக்கப்பட்ட ஒரு காணொளியாகவே கருதப்பட கூடியதாக உள்ளது.

காதல் வலையில் வீழும் பெண்கள் மிகவும் அவதானமாகவும் ஆண்களின் மனநிலையை புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். உண்மை காதல் ஒருபோதும் காதலனையோ இல்லை காதலியையோ கொச்சைபடுத்தாது. இந்த காணொளியில் வரும் ஆண் மிகவும் வன்மையான எண்ணபோக்கு கொண்டவனாகவும் உண்மையில் உள உடல் ரீதியான வன்முறையாளன் ஆகவுமே காணப்படுகின்றான்.சில வேளைகளில் வணிக ரீதியில் வெற்றி கொள்ள முடியாத கேடு கெட்ட  சில போட்டியாளர்களின் காழ்ப்பு சிந்தனையின் வெளிப்பாடாகவும்  இதை பார்க்க முடியும்.

காதல் என்ற மாய வலையில் விழும் முன்னர் பெண்கள் மிகவும் விழிப்புடையவர்களாக இருக்க வேண்டும்.கேடுகெட்ட ஆண்கள் வாழும் இந்த உலகில் பெண்களாகிய நீங்கள் இருபத்து ஐந்து வயது வரும் முன்னர் வரும் பருவ காதலில் வீழாமல் இருப்பது மிகவும் சிறந்தது.

பிந்தி கிடைக்கபெற்ற தகவல்களின் படி இந்த காணொளியில் வரும் ஆண் வேண்டும் என்றே திட்டமிட்டு அந்த பெண்ணின் குடும்பத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி பதினைந்தே வயது நிரம்பிய பெண்ணிற்கு காதல் வலை வீசி பெண்ணின் தந்தையின் உதவியுடன் வெளிநாட்டிற்கு வந்து திருமணம் செய்வதாக கூறி மிகவும் கேவலமாக நடந்து உள்ளதாக அறிய முடிகின்றது.சம்பவ தினத்தன்று ஒருவகையான மயக்க மாத்திரையை அந்த பெண்ணிற்கு கொடுத்து அவரை கேவலமாக ஒளிப்பதிவு செய்ததாக கூறப்படுகின்றது . மேலும் அந்த ஆணின் குடும்பமே இந்த சதி வலையை பின்னி உள்ளதாக அறிய முடிகின்றது.

எது எப்படியாக இருப்பினும் இவ்வாறு திட்டமிட்ட முறையில் நடாத்தப்படும் சமூதாய சீர்கேட்டு நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது நாட்டு கலாச்சார பண்பாட்டு ஒழுக்க விதிகளில் வாழும் நாம், இவ்வாறாக ஒழுக்க விதிகளை மீறும் ஆண்களையும் பெண்களையும் சும்மா விட போவதில்லை.எமது தேசியத்தையும்,விடுதலையையும்,இனத்தையும்,மொழியையும்  நேசிக்கும் நாம் ஒருபோதும் உறங்கி விடுவதில்லை. இப்படியான உறவுகளில் சிக்கியிருக்கும் ஆண்களையும் பெண்களையும் எச்சரிக்கின்றோம். நாமாக உங்களை கண்டு பிடிக்கும் பட்சத்தில் உங்களுக்கு கிடைக்கும் தண்டனையை உணர்ந்து கொள்வீர்கள்.

ஆகவே மதிப்புக்குரிய தமிழ் மக்களே நீங்களாகவே உங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள்.காதல் என்ற மாய வலைக்குள் நீங்கள் விழுந்து செய்யும் அருவருக்கத்தக்க முறையிலான நடவடிக்கைகளை மாற்றி கொள்ளுங்கள்.ஈழத்தில் ஒழுக்க நெறிகளை மீறுவோருக்கான தண்டனையை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அப்படி தெரியாவிட்டால் உங்கள் பெற்றோரிடமோ இல்லை உங்கள் உறவுகளிடமோ கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக