செவ்வாய், 16 அக்டோபர், 2012

காட்டி கொடுப்பில் ஈடுபடும் புலம்பெயர் ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்

நீண்ட காலமாக தமிழ் மக்களின் அவலங்களை ஓரளவுக்கு நியாயமான முறையில் எழுதி வந்த தமிழ் ஊடகங்கள் இப்பொழுது சிங்கள அரசியல்  வாதிகளின் கை பொம்மைகளாக மாறி இருக்கின்றார்களோ என்ற சந்தேகம் தோன்றி உள்ளது. 
அண்மைய காலங்களில் TAMILCNN  என்ற ஊடகம் அதிகளவில் இந்திய  சினிமா துறையினரையும் அவர்களது கலை நிகழ்வுகளையும் முன்னிலைபடுத்துவதும், வெளிநாடுகளில் வாழும் வேற்று இன மக்களின் நலனுக்காக நிதி திரட்டி அளிப்பதும், மேலும் எமது ஈழ மக்கள் படும் அவலங்களை எடுத்து எழுதாமல் அதிகளவில் மிகவும் அருவருப்பான தலையங்களின் கீழ் பதிவுகளை எழுதுவதும் இணையங்களின் தரத்தை குறைத்து விடுவதுடன் மக்களின் மனநிலையை போராட்டம் சம்பந்தமான நோக்கில் இருந்து திசை திருப்பி அவர்களை வேறு ஒரு திசையில் பயணிக்க வைக்கும் நிகழ்வாகவே நோக்க கூடியதாக உள்ளது.

 அது தவிர லங்காஸ்ரீ  என்ற ஊடகம் அதிகளவில் மரண அறிவித்தல்களை போடும் ஊடகமாகவும் தமது நலனுக்காக பணம் பண்ணும் நோக்கில் அமைக்க பட்ட ஒரு இணையமாகவும் மட்டுமே பார்க்க கூடியதாக உள்ளது.லங்காஸ்ரீ இணையத்தில் வரும் பதிவுகள் பெருமளவில் ஏனைய ஊடகங்களில் எழுதப்பட்ட விடயமாகவும் மீள்பதிவுமாகவே உள்ளது. அதிர்வு பற்றி கூற வேண்டும் என்றால் உண்மையின் சிகரங்கள் என்று சொல்லி கொண்டு  உண்மையில் சில வேளைகளில் மறைக்கப்பட வேண்டிய விடயங்களை எழுதி விடுகின்றார்கள்.அத்துடன் உண்மையான போராளிகளையும் அவர்கள் பற்றிய சுயவிபரங்களையும் வழங்கும் ஒரு ஆள்காட்டியாகவே பார்க்க கூடியதாக உள்ளது.

விடுதலை போராட்டமானது உறுதியாக இருந்த காலபகுதியில் சினிமா நிகழ்வுகள் தடைபடுத்தபட்டதுடன் விடுதலை சம்பந்தமான கலைநிகழ்வுகளும் இசைப்பாடல்களும் அதிகளவில் எழுதப்பட்டது. ஆனால் இப்போது ஈழம் சம்பந்தமான பாடல்களுக்கும் படங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் எமது இளம் தலைமுறையை தவறான பாதையில் வழிநடத்துவதில் தமிழ் ஊடகங்கள் அதிகளவில் தமது பங்களிப்பை வழங்குகின்றது.எமது இளம் தலைமுறையை திசை  திருப்ப  அதிகளவில் 
கீழ்த்தரமான ஆபாச படங்களை தமது இணையத்தில்  உலாவ விடுகின்றார்கள்.

தமிழ் மக்களின் நலன்களில் உண்மையில் அக்கறை உள்ள ஊடகங்களாக இருந்தால் எமது விடுதலை போராட்டம் சம்பந்தமான உணர்ச்சி மிக்க பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஈழத்தின் அவலத்தையும்,புலம்பெயர் மக்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இணையமாகவும் இருக்க வேண்டும்.அதை தவிர்த்து செயற்படும் ஊடகங்கள் எவையாக இருந்தாலும் தமிழ் இனத்திற்கும், விடுதலைக்கும் துரோகம் இழைக்கும் ஊடகமாகவே  நோக்கப்படும்.

லண்டன்  பி பி சி என்ற ஊடகத்திற்கு எரிக் சுல்கையும் வழங்கிய செவ்வியை முதன்மை படுத்தி வெளியிட்ட ஊடகங்கள் அதன் பின்னணியில் சிறிலங்காவின் காய் நகர்வை வெளிப்படுத்தி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

விடுதலை போராட்டமானது முற்று பெற்று, மூன்று முழுமையான ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வை முன்வைக்காமலும், இன்னும் கைது செய்யப்பட்ட போராளிகள் விடுவிக்கப்படாத நிலையிலும் நமது தமிழ் உறவுகள் வாடும் நிலையில்,எரிக் என்ற தனிமனிதன் இந்தியா,அமெரிக்கா கப்பலுடன் வந்தது,,,, பத்மநாபன் அழைப்பு விடுத்தார்,,,,, பிரபாகரன் ஏற்கவில்லை, என்று புளுகுவதை எல்லோரும் எழுதிக்கொண்டும் விளம்பர படுத்திக்கொண்டும் உள்ளார்கள், உலகின் முன்னிலையில் எழுதிய சத்திய வாக்குகளையே இலங்கை ராணுவமோ அல்லது அரசியல்வாதிகளோ  காப்பாற்றாத நிலையில் நான்கு சுவருக்குள் எழுதப்பட்ட சத்தியங்களையா காப்பாற்ற போகின்றார்கள்?

உண்மையில் மே 18 நடந்த உண்மைகளை சம்பந்தபட்ட நபர்களே அறிவர். ஒரு நியாயமான முறையில் சமத்துவமாக உலக முன்னிலையில் நேருக்கு நேராக உண்மைகள் வெளிவரும் வரையில் ஒருவர் மீது குற்றம் சாட்டுவது அதில் இலாபம் காண விளைவதும் தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் கேவலம் ............................

ஆகவே சம்மந்தபட்ட தமிழ் ஊடகங்கள் நியாயமாகவும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்.
தமிழரின்  தாகம் தமிழ் ஈழ தாயகம்
பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக