ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

அறிவுரீதியான தாக்குதலும் ஸ்ரீலங்கா அரசும்.

எமதினிய தமிழ் மக்களே!

இப்போது முக புத்தக பாவனையானது மிகவும் அதிகரித்து உள்ள வேளையில் பத்திரிகைகளை எட்டி பார்க்க விரும்பாத நமது இளைய தலைமுறை தமது பொன்னான நேரத்தினை முகபுத்தகத்தில் செலவழிக்கும் நேரம் மிகவும் அதிகமாக உள்ளது. இதை தெரிந்து கொண்ட அரசு,எம்மில் இருக்கும் சில குள்ள நரிகளை பயன்படுத்தி தவறான தகவல்களை தர முன்வந்து உள்ளது.

ஈழத்தில் நடந்த கொடுமைகைளை இன்னும் மறக்காத எமதினம், தமது கோபங்களை தீ சுவாலையாக இன்னும் தமது இதயத்தில் சுமந்து கொண்டு இருப்பதால், இந்த தீ சுவாலைகள் எல்லாம் எப்போது எரிமலையாக வெடிக்கும் என்று தெரியாத நிலையில் உள்ள அரசு,அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக உலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் கரங்களை இன்னும் ஒடுக்கும் நோக்கில் தாமே இப்படி பட்ட செயல்களில் ஈடுபட்டு விட்டு, இன்னும் இலங்கையில் பயங்கரவாதம் அழியவில்லை என்று சொல்வதற்காகவும் எம்மில் இன்னும் தீவிரவாதி என்ற போர்வையை போர்த்துவதற்காகவும் ஆடும் கேடுகெட்ட சினிமாத்தனமான நடவடிக்கையாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது.

யாழ்பாணத்தை பொறுத்தவரை, வீட்டுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் காணப்படும் போது நான்கு மோட்டர் வண்டியில் வந்து விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள் என்பதும் தப்பி சென்று விட்டார்கள் என்பதும் முழு பூசணிக்காயை சோற்றில் புதைக்க நினைக்கும் ஒரு பேடித்தனமான செயலாகும். அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தால் அது அரசாலும் அரசுக்கு ஆதரவாக செயல் படும் ஒட்டுகுழுக்களின் செயலாக இருக்குமே தவிர விடுதலை புலிகளானதாக இருப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றே சொல்லலாம்.இந்த ஒட்டு குழுவாதிகளும் இராணுவமும் விடுதலை புலிகள் பெயர்களை பயன்படுத்தி அண்மைய காலங்களில் செய்யும் செயற்பாடுகளாக நெல்லியடி வீதியில் புலிக்கொடியுடன் சென்றது, பிரச்சார நடவடிக்கையின் போது கழிவு எண்ணையை ஊற்றியது,மருத்துவர் வீட்டில் கொலை மிரட்டல் மேற்கொண்டது, பல்கலை கழக மாணவனை தாக்கியது என்று இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

எனவே மதிப்புக்குரிய மக்களே !

இவர்கள் கூற்றில் நாம் இன்னும் ஒரு விடையத்தை நுணுக்கமான செய்தியாக அறிய வேண்டியவர்களாக உள்ளோம். அந்த செய்தி என்னவெனில் எமது ஈழத்தில் உள்ள இளம் தலைமுறையினர் அதிகளவில் மோட்டர் வண்டிகளை உபயோகிப்பதால் அவர்களில் பலருக்கு "விடுதலை புலிகள்" என்ற முத்திரை குத்தப்பட்டு காணமல் போகலாம். இல்லை பயங்கர வாத சட்டத்தின் பிடியில் அகப்பட்டு கைது செய்யப்படலாம் என்பதாகும்.இதில் மிகவும் பாதிக்க பட போவது எமது கல்வி கற்கும் உறவுகளும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உள்ள போராளிகளும் தான் .

இன்னும் தூர நோக்கில் ஆராய்ந்தால், விடுதலை புலிகள் மீது இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளால் பயங்கவாத சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட மூன்று மாத காலத்துக்குள் இப்படியான செய்திகளை கசிய விடுவது உலக நாடுகளின் பார்வையில் விடுதலை புலிகள் பற்றிய தமது தடை நியாயமானது என்று உணர்த்துவதற்கும் மனித உரிமை அமைப்புகளாலும், ஐக்கிய நாடுகள் நபையின் கேள்வி கணைகளில் இருந்து தப்புவதற்கும் ஆடும் கண்கட்டி வித்தையாகவே இதை நாம் நோக்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் அமைப்பு எல்லாமே அமெரிக்காவின் கைபொம்மைகள் என்று தெரிந்தும், ஏன் இப்படி எழுதுகின்றேன் என்றால் வெளி பார்வைக்கு அமெரிக்கா வைத்தது தான் சட்டம் என்று உலக மக்களுக்கு சொல்ல முடியாது என்பது தான்.

ஆகவே எமதருமை தமிழ் மக்களே!

ஒரு விடையத்தை யாராவது எழுதினால் அதன் நம்பக தன்மை பற்றி அலசி ஆராயுங்கள். கண்ணை மூடிக்கொண்டு என்ன எழுதினாலும் நம்பி விட்டாதீர்கள். உண்மையில் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் முதலில் நம்பிக்கை துரோகிகளை களைந்து எடுப்பார்கள். இல்லை பெரிய பதவியில் உள்ள இராணுவத்தை அழிப்பார்கள். இப்படியாக மாவீரர் துயிலும் இல்லத்தில் குடிகொண்டுள்ள இராணுவத்தின் மீது ஏகே 47 துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி இருக்க மாட்டார்கள் என்பது நிஜம். இன்னும் ஒரு விடுதலை போராட்டம் ஆரம்பிக்க பட்டதால் அது மிகவும் உத்வேகமானதாகவும் வீரியமானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை .

அத்துடன் இந்த செய்திகளை வெளியிட்ட சில இணைய தளங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல் படுவது அவசியமாகும் . இறுதியாக இப்படிபட்ட பொய் பிரச்சாரங்களை வெளியிடுவது எமது மாவீர செல்வங்களுக்கும் அவர்களின் தியாகத்திற்கும் மூன்று லட்சம் மக்களின் படுகொலைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகும் ...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக