செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அவனை தேடியே ஒரு பயணம்

என்னுயிர் காதலே !
கோவிலுக்கு போகாத எனை
கோவிலுக்கு போக சொன்னது
உன் காதலா ?
வரங்கள் வேண்டாத எனை
வரைமுறையற்ற வரங்களைவேண்ட
சொன்னதும் உன்காதலா ?
தடுமாறி சோராத எனை
நடுக்கடலில் தள்ளிவிட்டது
போல தத்தளிக்க செய்வதும்
உன்காதலா ?
வாழ்க்கையிலே வெற்றிபெற
பணத்தை மட்டும் உழைத்துவிட
சொல்லும் சில காதல்
வாழ்க்கையிலே தோற்றுவிட
வாழ்க்கையையும் தொலைத்துவிட
சொல்லும் சில காதல்
நீ
எந்த காதல் வரிக்குள்
தொலைத்தாய் என்னை?
அதிசயங்கள் என்று
நான் அறியாமலே
அதிசயத்தை காட்டியவன்
நீ
பெண்மையின் துணிவு
எதுவென்று கோடிட்டு
வென்றவன்
நீ
நீருக்குள் நெருப்பென்றும்
நெருப்புக்குள் நீரென்றும்
முரணான கலவையாக
நீ
வெளித்தோற்றத்தில்
சாதாரண மானிடனாய்
உள்தோற்றத்தில்
அற்புத சக்தியாய்
அலைகடல்களையும்
அடக்கி ஆளும்
வல்லமை கொண்டவன்
நீ
அந்த வல்லமையின்
சக்திக்குள்
காதலை தொலைத்துவிட்டு
உன் வருகைக்காக
என் தவமிருப்புக்கள் ...
நாளை நம்
திருமண நாளின் கற்பனை
தூறல்கள்
காதலையும் காதலியையும்
தெருவோரத்தில் ....
சென்ற உனை
தேடியே என் நினைவுகள்...
நிலானி
16.09.2019
23.06
லண்டன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக