செவ்வாய், 17 செப்டம்பர், 2019

பெண் :ஒரு காதல் கனவு கண்ணில் வந்ததே நீ வந்ததாலே
என் கன்னம் எங்குமே ரோஜா பூத்ததே உன்னை கண்டதாலா

ஆண்:ஒரு நட்சத்திரத்தை பூமியில் கண்டேன் நீ வந்ததாலா
நான் ரெக்கை இன்றியே பறந்து போகின்றேன் உன்னை கண்டதாலா

பெண் :அட என்னையே மறக்கின்றேன் உன்னையே நினைகின்றேன் காதல் வென்றதாலா

பெண் :உன் வீட்டு மரம் சுகமா அதில் வாழும் அணில் சுகமா
உன் நிழலோடு வருகின்ற என் நிழலும் சுகமா சுகமா சுகமா

ஆண்:பேசாத மொழி சுகமா நான் தீண்டாத வலி சுகமா
நீ எனக்காக காத்திருக்கும் நேரங்கள் சுகமா சுகமா சுகமா

பெண் :நான் கடிக்கா உதட்டினிலே உன் மீசைகளும் சுகம்தானே
ஆண்:நீ வாழும் மனசிலே உன் நினைவுகளும் சுகம்தானே

பெண்:உன்னோடு நானிருந்தால் என் வாசலில் பூ முளைக்கும்
ஆண்:நீ இல்லாமல் நானிருந்தால் என் வாசலில் தீ எரியும்

ஆண்: அட வெண்ணிலா பூக்குதே சூரியன் வேர்குதே நம்மை கண்டதாலே

ஆண்:அலைபாயும் உன் விழி சுகமா அது தேடும் உன் இமை சுகமா
உன் கழுத்தோரம் கவிபாடும் சிறு மச்சம் அது சுகமா சுகமா சுகமா

பெண் :எனை தீண்டும் உன்கரம் சுகமா உன் கண்ணுக்குள் நான் சுகமா
நான் தடுத்தாலும் கேட்காதா உன் கோபங்கள் சுகமா சுகமா சுகமா

ஆண்:உன்னோடு வாழ்வதிலே என் ஆயுள் இங்கே நீளுதடி முன்னாலே
பெண் : உன்னோடு வாழ்ந்தபின்னே மரணமும் கலையுதடா தன்னாலே

ஆண்:நான் பேசாத வார்த்தைகளை வைபரிலே அனுப்பி வைத்தேன்
பெண் :நீ பொட்டு வைக்கும் நெற்றியை உனக்காக காக்க வைத்தேன்
பெண் :அட என்னை நீ உன்னை நான் என்னமோ செய்கின்றோம் காதல் வென்றதாலா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக