செவ்வாய், 17 செப்டம்பர், 2019

மாற்று இயக்கங்களின் முகவலை எழுத்தாளர்களுக்கு பணிவான விண்ணப்பம்

தமிழீழ விடுதலைபுலிகளின் காலகட்டத்தில் நடந்த சிறைச்சாலை துன்பியல்களை பற்றிய தொகுப்புகளை விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாக கூறியவர்கள் இப்போது வெளியிட்டபடி உள்ளீர்கள் .
உலகில் உள்ள இராணுவ அல்லது போராளிகள் கட்டமைப்பு தமக்கு துரோகம் செய்ததாக ஒருவரை நம்பும்போது அவர்களுக்கு வழங்கும் தண்டனையையே விடுதலை புலிகள் கட்டமைப்பும் வழங்கியிருக்கும் .
இது அமெரிக்கா இராணுவ கட்டமைப்பிற்கோ /அல்லது பிரித்தானிய இராணுவ கட்டமைப்பிற்கோ ஏன் உலகில் உள்ள எந்த இராணுவ கட்டமைப்பிற்கும் பொருந்தும் . சிறைத்தண்டனைகள் பொதுவானதாகவே அமையும். விடுதலை புலிகளின் கரத்தில் சிக்கிய உங்களின் உறவுகளை பற்றி எழுதும் நபர்களிடம் வெளிப்படையாகவே கேட்கின்றேன். நீங்கள் விடுதலை புலிகள் உறுப்பினர்கள் என்று சந்தேகித்தவர்களை கைதுசெய்து அழைத்து வாழ்த்தி விருந்து வைத்தா அனுப்பினீர்கள் ??
நீங்களும் அவர்களை எவ்வாறு கேவலமாக நடத்தினீர்கள் என்று உங்களது மனசாட்சியிடம் கேட்டு பாருங்கள் ..எப்படியான கொடுமைகளை சரணடைந்த /நிராயுதபாணியாக நின்றவர்களுக்கு செய்தீர்கள் ?
ஆகவே
பழைய குப்பைகளை கிண்டி கிண்டி உங்களின் அதிதீவிர துரோகங்களையும் பிழைகளையும் சரியென்று வாதிட முன்வர வேண்டாம் .
நீங்கள் நீதியாளர்களாக இருந்து இருந்தால் குறித்த நபர்கள் உயிர்ப்புடன் வாழ்ந்தபோது குறித்த நபர்களிடம் கேள்விகளை கேட்டு இருக்க வேண்டும் .விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை உண்மையாக நேசித்தவர்கள் யாவரும் அழிந்துவிட்ட நிலையில் யாரும் இல்லாத ஊரில் உங்களின் கடைகளை திறக்க வேண்டாம் .
நீங்கள் எழுதும் துரோக செயற்பாடுகளை நியாயம் செய்ய முற்பட்டால் மக்களை நீங்கள் ஒருங்கிணைக்கமுடியும் என்று கனவிலும் எண்ணிட வேண்டாம் .
விடுதலைப்புலிகள் கட்டமைப்பு செய்ததாக கூறும் சித்திரவதைகளை நீங்கள் கூறும்போது நீங்கள் என்ன செய்ததால் அவர்கள் அப்படியான சித்திரவதை செய்து இருப்பார்கள் என்று தான் எண்ணி எண்ணிப் பார்க்கின்றோம்??அப்போது நீங்கள் செய்திருக்கக்கூடிய துரோகங்களே எமக்கு தெரிகின்றது. முஸ்லீம் மக்களில் இருந்தவர்களில் சிலர் துரோக செயற்பாட்டில் ஈடுபட் ட போது அவர்களை யாழ்ப்பாண நகரை விட்டு வெளியேற்றியது தவறு என்று கூறும் நீங்கள் முஸ்லீம் மக்கள் எல்லோரையும் துன்புறுத்தியிருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்களா?
ஒரு விடுதலை போராட்ட சூழலில் சில அசம்பாவிதங்களும் நிகழும் இதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இருக்க போவதில்லை .அதனை எழுதி பெரிதாக்கி என்ன இலாபத்தை நீங்கள் அடைந்திட போக்கின் றீர்கள்?
உங்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான்
நீங்கள் செய்த கொலைகளை கொள்ளைகளை துரோக செயற்பா ட் டை அவர்கள் உயிர்ப்புடன் இருந்தவரை பட்டியல் இடவும் இல்லை .ஏன் கருணா அம்மானின் குற்றம் என்னவென்று இன்றுவரை எமது மேதகு பொதுவெளியில் வாயே திறக்கவில்லை . அவரின் பெயரை சொல்லிக்கொண்டு இருக்கும் சில அருவருடிகள் தமக்கு தெரிந்தவற்றை இதுதான் நிகழ்ந்தது இதுவேதான் நிகழ்ந்தது என்று கூறிக்கொண்டு இருக்கின்றார்கள் .
எம்மை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நபர்கள் வந்து குறித்த குற்றங்களுக்கு அவர்களின் பக்க நியாயத்தை கூறாதவரை ஒருபக்க உங்களின் கருத்தை வைத்து நீங்கள் நல்லவர்கள் என்று யாரும் பூமாலை போட போவதில்லை .
அப்படி பூமாலை போட வருபவர்கள் நாளை நீங்கள் பதவியை துறந்தவுடன் அல்லது உங்களின் மரணத்தின் பின்னர் உங்களையே துரோகிகள் என்றுதான் எழுதி வைப்பார்கள் .இதுவே உண்மையும் சத்தியமுமாக அமையும் .
ஆகவே
படுத்து இருந்துகொண்டு துப்பாதீர்கள் .அது உங்களின் முகத்தை தான் அசிங்கமாக்கும் .இன்று அரசியலை பேச முன்வரும் அனைவருக்கும் / பணம் இருக்கென்ற மமதையில் தவறுக்கு மேல் தவறு செய்யும் அனைவருக்கும் / சுயநலத்தில் மற்றவர்களின் மீது வதந்தியை சொல்லும் அனைவருக்கும் ஒன்றை சொல்லுகிறோம் ,
எம் மண்ணிற்காக இறுதிவரை போராடிய உத்தமர்கள்/ எம் மண்ணிற்காக மடிந்த மாவீரர்களின் இறுதி மூச்சின் ஆசையும் கனவும்
என்றும் பொய்த்திட போவதில்லை .
எமது பலம் மாவீரர்களின் எண்ணங்களே
எமது பலம் எமது எழுத்தாணியே ...
காவியா
லண்டன்
14/09/2019
10.12

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக