செவ்வாய், 17 செப்டம்பர், 2019

Love

No photo description available.
ஒற்ற கல்லில் குந்த வச்சு
ஓரத்தில் பீப்பா வச்சு
வெள்ளி சட்டி தண்ணி வச்சு
வெண்மதியில் என்னை வச்சு
கூனு விழுந்த பின்னாலும்
குளிப்பாட்ட வந்த மச்சான்
ஓரத்தில குட்டி பசங்க
ஒளிஞ்சுகிட்டு சிரிக்கிறாங்க

மஞ்சள் பூவை போன்றவளே
மாமன் மனசில் வாழ்பவளே
என் வாழ்வின் தேவதையே
எல்லாமாக வந்தவளே
குஞ்சு குருமன் சிரிச்சா என்ன
கூதல் காத்து அடிச்சா என்ன
உன்னை விட்டு நானும் போக
உள்ளம் கொஞ்சமும் ஏவலையே

காலும் கொஞ்சம் நோவுதுங்க
கையும் கொஞ்சம் வலிக்குதுங்க
நேற்று செய்த கறி சோறு
உங்களுக்கு மட்டும் போதுமுங்க
நீங்க விட்ட மீதி உண்ண
பாவி மனசும் ஏங்குதுங்க
பச்சை அரிசி கஞ்சியுங்க
ராத்திரிக்கு போதுமாங்க

உந்தன் கையால் சாப்பிட்டா
எல்லாமே அமிர்தம் தானே
ஒற்றை பார்வை பார்த்தாலே
பசியும் மறப்பேன் உன்னாலே
தாயை போல காப்பவளே
என் தாரம் என்று வந்தவளே
வாழும் வாழ்வின் அர்த்தத்தை
வானவில்லாய் வரைந்தவளே

என்ன சொன்னாலும் ரசிக்கும் மச்சான்
பூவை போல தாங்கும் மச்சான்
உன்னை விட்டு போவேனா
நீ என்னை விட்டு போவாயா
காலன் நம்மை நெருக்கும் போதும்
கையை கோர்த்தே போவோமா
காற்றாய் நாமும் கலப்போமா
காதல் தீவில் மிதப்போமா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக